சில அவசியமான வாழ்க்கை பழக்க முறைகள்..!
👍 தினமும் தூங்கப்போகும் நேரம் ஒரே நேரமாக இருக்கட்டும். இரவு 9 மணியோ (அ) 10 மணியோ தினமும் அதே நேரத்திற்கு தூங்கச்செல்லவேண்டும்.
👍 தினமும் காலை 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும்.
👍 காபி, புகையிலை, டீ, மது இவற்றினை அடியோடு தவிர்த்துவிட வேண்டும்.
👍 காலையில் உடற்பயிற்சி செய்வது முதல்வேலையாக இருக்கட்டும்.
👍 மாலையில் யோகா செய்யுங்கள். இதனை காலையிலும் செய்யலாம்.
👍 பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.
👍 உங்கள் படிப்பு (அ) வேலைக்கு அவசியமான ஒன்றினை தினமும் கற்றுக்கொள்வது நல்லது ஆகும்.
👍 எந்த இடத்திலும் முதலில் காதுகொடுத்து கேட்க வேண்டும்.
👍 உங்கள் நேரம், பணம் இரண்டும் உங்கள் வாழ்வின் சக்தி. அதனை எக்காரணம் கொண்டும் வீணடிக்க வேண்டாம்.
👍 தோற்றமும் அவசியம் தான். எப்பொழுதும் சுகாதாரமாக இருங்கள்.
👍 நாம் தினமும் நமது பிரச்சினைகளுக்குள் மூழ்கியே நேரத்தினை வீணடிக்கின்றோம். அதனால் நாம் நமது குறிக்கோளில் இருந்து தவறி விடுகின்றோம். தினமும் காலையில் ஒருமுறை உங்கள் குறிக்கோளினை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.
👍 புன்னகை செய்யுங்கள், பார்த்தாலே சண்டைபோடுபவர் போல இருப்பது உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதல்ல.
👍 நல்ல காலை உணவு நல்ல நாளின் ஆரம்பம். பழம், ஓட்ஸ் போன்றவை உங்கள் காலை உணவினை சத்துள்ளதாக்கும்.
👍 தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை கலந்து நீராக பருகுங்கள். வைட்டமின் சி சத்து கிடைக்கும், சக்தி கூடும், உடலின் வீக்கங்கள் குறையும்.
👍 உடற்பயிற்சி என்பதனை அன்றாடம் 20 நிமிடமாவது செய்யுங்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.
👍 நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் நடக்கவேண்டும்.
👍 தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்தினை எடுத்துக்கொள்ளுங்கள்.
👍 பட்ஜெட் அவசியம். சேமிப்பு சிறிதளவாயினும் அவசியம்.
👍 ஏதாவது ஒன்றினை (நல்லதினை) தினமும் கற்றுக் கொள்ளுங்கள், மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.
👍 உங்கள் டேபிள், பீரோ இவற்றினை சுத்தமாய் முறையாய் வையுங்கள். குப்பைகூளம் போல் வைக்காதீர்கள்.
👍 பயம் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும், நம்மையும் உயிரோடு கொல்கின்றது. முதலில் பயத்தினை உடைத்தெரியும் வழியினைப் பாருங்கள்.
👍 ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
👍 உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
👍 ஏதாவது ஒரு நல்ல புத்தகம் படிப்பதினை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
👍 எட்டு மணிநேரம் தூங்குங்கள்.
👍 தவறான பழக்கவழக்கங்களை விட்டுவிடுங்கள். எதையும் எண்ணி வருந்தி மூழ்காதீர்கள்.
No comments:
Post a Comment